tamilnadu

img

கொரோனாவால் மது விற்பனை 29 சதவிகிதம் சரிந்தது... இந்திய உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான ஆலை முதலாளிகள் கவலை...

புதுதில்லி:
2020-21 நிதியாண்டின் முதல் 6 மாத காலகட்டத்தில், இந்தியாவில் மதுபான விற்பனை சுமார் 29 சதவிகிதம் சரிவைச் சந்தித்து இருப்பதாக, இந்திய மதுபான கூட்டமைப்பான ‘சிஐஏபிசி’ (Confederation of Indian Alcoholic Beverage Companies (CIABC) தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, மதுபான விற்பனைக்கான தடை மற்றும் மதுபானங்கள் மீது போடப்பட்ட கொரோனாவரி ஆகியவையே மதுபான விற்பனையில் ஏற்பட்ட இந்த சரிவுக்குக் காரணம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
கொரோனாவையொட்டி, அதிகமான வரி விதிக்கப்பட்ட 4 மாநிலங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு விற்பனை சரிந்திருப்பதாகவும், ஆந் திரா, சத்தீஸ்கர், மேற்குவங்கம் மற்றும்ராஜஸ்தான் ஆகியவையே இந்த நான்கு மாநிலங்கள் என்றும் இந்தியமதுபான கூட்டமைப்பு குறிப்பிட் டுள்ளது.நடப்பு நிதியாண்டின் இரண்டாம்காலாண்டில் ஆந்திரா 51 சதவிகிதம், சத்தீஸ்கர் 40 சதவிகிதம், ஜம்மு- காஷ்மீர் 39 சதவிகிதம், மேற்கு வங்கம் 22 சதவிகிதம் மற்றும் ராஜஸ்தான் 20 சதவிகிதம் என விற்பனை
யில் சரிவைக் கண்டுள்ளன. 

ஆனால், இதேகாலத்தில் பஞ்சாப் 20 சதவிகிதம் , ஹரியானா 17 சதவிகிதம், உத்தரகண்ட் 15 சதவிகிதம், தெலுங்கானா 7 சதவிகிதம் மற்றும் உத்தரப்பிரதேசம் 6 சதவிகிதம் என விற்பனையில் அதிகரிப்பைக் கண்டுள்ளன. இதற்கு, வரி விதிப்பு இம்மாநிலங்களில் அதிகம் இல்லை என்று காரணம் கூறப்படுகிறது.ஒட்டுமொத்தமாக 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) நாடு முழுவதும் மதுபான விற்பனை 49 சதவிகிதம் சரிந்திருந்தது. இரண்டாவது காலாண்டில் அது 9 சதவிகிதம்தான் என்றாலும், சராசரியாக கடந்த அரையாண்டில் 29 சதவிகிதம் மதுபான விற்பனை சரிந்துள்ளது.இதுகுறித்து பேட்டி அளித் துள்ள, மதுபான நிறுவனங்களின் கூட்டமைப்பின் இயக்குநர் வினோத் கிரி, “எங்கள் தயாரிப்புகள் சமூகமயமாக்கலையே மையமாகக் கொண்டிருக்கின்றன என்பதால், கடந்தஆண்டு இருந்ததைப் போலவே இந்தாண்டும் விற்பனை இருக்குமா?” என தெரியவில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.அதேபோல, ‘அம்ருத் டிஸ்டில் லர்ஸ்’ நிர்வாக இயக்குநர் ரக்ஷித் ஜக்தேல் அளித்துள்ள பேட்டியில், “கொரோனா சிகிச்சைக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படா விட்டாலோ, குளிர்காலத்தில் தொற்றுநோய்கள் தொடர்ந்து அதிகரித்தாலோ நடப்புநிதியாண்டின் கடைசி காலாண்டிலும் மதுபான விற்பனை சரிவு தொடரலாம் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தியா உலகின் மூன்றாவது பெரிய மதுபானங்கள் சந்தையாகும். ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகவும் மதுபான உற்பத்தி- விற்பனை உள் ளது. இந்தத் தொழில்கள் மூலம் மத்திய - மாநில அரசுகளுக்கு மதிப்புகூட்டப்பட்ட வரி (வாட்) மற்றும் கலால் வரி ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கோடிஅளவிற்கு வரிவருவாய் மட்டும்கிடைக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

அதுமட்டுமன்றி, பெரும்பாலான மாநில அரசாங்கங்களின் வரி வருவாயிலும் 20 முதல் 40 சதவிகித பங்களிப்பை மதுபானத் தொழில்கள் தருகின்றன. சுமார் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பதாகவும் இருக்கின்றன. அதேநேரம், மதுபானத் தொழில்நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 லட்சம் விவசாயிகள் உட்படகிராமப்புற இந்தியாவில் 3.5 கோடிமக்களை பாதிப்புக்கும் உள்ளாக்குவதாக இருக்கிறது.